அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நிறைவடைகிறது.
கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:
மேல்நிலைப்பள்ளி
*ஜூலை 29 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
பணி மாறுதல்.
*ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 3 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல்.
*ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முது கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்).
*ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).
*ஆகஸ்ட் 10 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்).
*ஆகஸ்ட் 12 (புதன்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசைஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்).
*ஆகஸ்ட் 17, 18 (திங்கள், செவ்வாய்) - பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்.
இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
SOURCE;-தி ஹிந்து- தமிழ் நாளிதழ்
SOURCE;-தி ஹிந்து- தமிழ் நாளிதழ்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை